Thursday, November 17, 2016

சேர்வதெப்போது!!!

என் பார்வை 
முன்னிலும் 
விரிந்திருக்கிறது!!!

என்னுள் 
உள்ளொளி பெருகுகின்றது!!!

என் பாதையினைப் பற்றி 
பெரிதும் எனக்கு தெரியாது...
தெரியவும் விரும்பவில்லை!!!

அங்கே 
நான்
இரு காலடித்தடங்களைக் காணுகிறேன்!!!

என் தலைக்குமேல் 
நிலவின் வெளிச்சமும்...
காலின் கீழ் 
நிழலின் இருளும் சூழ 
நடைபயில்கிறேன்!!!

காற்றினில் தலையசைக்கும் 
இலைகளுடன் -
நானும் தலையசைக்கிறேன் - அந்த 
தென்றலின் இசைவுக்கு!!!

என் பார்வைகள் 
எனதாக இருக்கலாம் - ஆனால் 
அதன் ஒளியாக...

பாதை எனதுதான் - அனால் 
அதில் பதிந்த 
பாதங்கள்....

என் பயணத்தில் பதிந்த 
காலடித்தடங்களில் 
ஒன்று...

இருள் சூழ்ந்த 
வழியதனில்
வெளிச்சம் வாரி இரைக்கும் 
தண் நிலவாக இருப்பது...

என்னை ஓர் 
இலையாய் இசையவைக்கும் 
தென்றல்....

இன்னும் புரியவில்லையா??!!
அந்த மழைத்துளி 
என்று
இந்த மண்ணோடு சேரும்!!!

வானையும் கடலையும் 
இணைக்கும் 
காலைக்கதிரவன் போல 
நம் வாழ்வில் 
என்று அந்த 
காலக்கதிரவன் உதிப்பது!!! - சௌந்தர் 

No comments:

Post a Comment