என்றும் தொலைந்திடும்
ஒரு தூசாய்...
காற்றின் கரங்களில் தன்னைக் கொடுத்து,
காலத்தின் கால்களில் பயணிக்கும் ஒரு தூசாய்...
வானுயரப்பறக்கினும்,
நானெனும் கனம்,
க்ஷணமும் தொற்றாது,
வான்வெளியினில் நீந்திடும் தூசாய்...
பயனென்றுகொண்டு பார்ப்பவர் கண்ணுக்கு
பயனென்ன என்ன என
பகன்றிடும் உதட்டிற்கு
பதிலேதும் சொல்லாது
பறந்திடும் தூசாய்...
அடையாளம் ஒன்று
தடங்கள் வேண்டும் என
எண்ணிடும் எளியார்க்கெல்லாம்
எளிமையாய்
காற்றிலே தவழும் வலிமையாய்
கணம்பொருந்திய தூசாய்...
பெயரில்லை, பொருளில்லை,
ஒன்றுமில்லை,
நான் தூசு எனினும் அதுவும் நானில்லை...
அப்படி ஒன்றுமில்லா நான்,
நானில்லா நான்
இந்த பெருவெளியில்
பறக்க,
ப்ரபஞ்சத்தினை அளக்க,
ஒரு தூசாய் மாறிப்போவேனோ நான்!!! - சௌந்தர்
No comments:
Post a Comment