Tuesday, February 4, 2014

படித்ததில் பிடித்தது.... உலகம் யாவையும்


இலங்கை ஜெயராஜ் அவர்களின்  "உலகம் யாவையும்" எனும் நூலில் வாசித்த குறிப்பை என் சொந்த மொழி நடையில் உங்களுக்காக.

தமிழரில் இலக்கியம் என்பது மிகச் சிறந்த ஒன்று... 
இலக்கு + இயம் = மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான இலக்கினை இயம்புவது (சொல்வது)
இதில் தலைசிறந்ததாக விளங்குவது இராம காதை என்னும் "கம்பராமாயணம்"
அறம், பொருள், இன்பம், வீடு இவை நான்குமே நமது காப்பியங்களிலும் இதிகாசங்களிலும் வலியுறுத்தபடுவன....
அறம் இருவகைப்படும் மூலஅறம் மற்றொன்று சார்புஅறம் 
மூலஅறம் என்பது எந்த நாட்டிற்க்கும் எந்த மக்களுக்கும் பொதுவானவையாகும்... மற்றையது இடம் கண்டு வேறுபாடும்..
கம்பன் கடவுள் வாழ்த்து எழுத தலைப்படும் போது அவன் சிந்தித்திருக்க வேண்டும்... உலகினை படைத்த இறைவனை நாம் பாடுங்கால் அது இறைவனை குறிக்க வேண்டும்.....
இறைவன் எத்தகைய தன்மையன் என்று கம்பர் ஆராய்ந்து இருகக்கூடும்... 
இறைவன் "உளவாதல்" "நிலைபெறுதல்" "நீங்குதல்" என்னும் தன்மை உடையவன் அதாவது உருவாகுதல், நிலைபெற்று பின்பு தன்னை ஒடுக்கி (அழித்து) கொள்பவன்....
இந்த மூன்று தன்மையில் இறைவனை நாம் இரண்டாவது நிலையில் அதாவது நிலைபெருதலில் தான் உணர முடியும் என்று கம்பர் எண்ணினார் போலும்... இந்த மூன்று நிலையினையும் விளக்கும் சொல் ஒன்று உள்ளது.... 
இந்த உலகம் தோன்ற ஆதி சப்தம் என்கிறது ஆன்மிகம் அறிவியலும் ஒலியிலிருந்து தான் இந்த உலகமும் தோன்றியிருக்க வேண்டும் என்கின்றனர்... அதை தான் நாம் ஓம்காரம் என்கிறோம்... ஓம் என்பது அகார (அ) உகார (உ) மகார (ம்) சேர்க்கை... அ + உ + ம் = அஉம் என்பதே ஓம் என்கிறோம்... இதில் ஆகாரம் என்பது ஆக்கம் (தோன்றல்), உகாரம் (நிலைபெறுதல்) மகாரம் (முடிதல்). நாம் அ எனும் போது சொல் பிறக்கின்றது... எல்லா சொற்களுக்கும் பிறப்பு அ தான் அதனால் தான் குழந்தை முதல் சொல்லாக அம்மா என சொல்கின்றது... உகாரம் என்பது நிலைபெறுதல்... ம் என்பது ஒரு சொல்லின் முடிவு... இதனால் தான் கம்பர் இறைவனின் நிலை பெறுதலை உணர்த்த உகாரத்தில் கடவுள் வாழ்த்தினை செய்கின்றார்.... 
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே! (கம்பர்)