Wednesday, April 27, 2011

என் சுவாசச் சொல்லிற்கு...

இங்கே நான்...
உன் நினைவுகள் தான் என்னைத் தாங்கிகொண்டிருகின்றது!!!
நான் துங்கும் பொது...
என் குழலை கோதி நீ கொடுத்த முத்தம்...
வீட்டில் என் கையால் நான் உணவு  உண்டதே இல்லை...
எனக்கு உணவு இட்ட உன்கைகள்...
கண்ணீர்துடைத்த உன் விரல்கள்...
அள்ளி அணைத்த அன்பு...
அம்மா என்னும் உன் பெயர் கூட சுவாசச் சொல்லாக இருப்பது எனக்கு வியப்பு தான்....
உன் பெயர் மட்டும் அல்ல...
நீயும் என் சுவாசம் தான்...
என்னை காதல் வாட்டவில்லை...
கண்ணீர் வாட்டவில்லை!!!
உன்னை காணாத பிரிவு....
உன் அணுக்கமும் ஸ்பரிசமும்  இல்லாத நாட்கள்...
நீ ஊட்டாத உணவு...
நீ கோதாத குழல்..
இவைகள் என்னை கொன்றுவிடுகின்றன....
என்னை நானே வெறுத்து விடுகிறேன்...
இங்கே நீ இல்ல விடினும்
அம்மா என்னும் உன் சுவாசச் சொல் தான் என்னை வாழவைக்கின்றது...
---சௌந்தர்