எங்கும் நான்..
நீக்கமற நிறைந்த
நோக்கம் நான்!!!
ஒரு பறவை
தன் பேடுடன் கூடிடும் பொழுதில்,
கதிரவன் கதிர்கள்
மலையினை தழுவிடும் பொழுதில்,
இனிய இசையில்
இசைந்திடும் பொழுதில்,
என்னுள் பரவியிருக்கும்
காதலின் பிரவாகதினை
பருகத்தலைப்படாமல்
எங்கோ எதிலோ அதனை
தேடிடும் நொடிகளில்,
இறையின் கரங்களில்
கரைந்திடும் பொழுதில்...
என் நான்
கரைந்து...
கவிழ்ந்து...
நானாகிறேன்!!!
என் உள்ளிருக்கும் துணைதனை
உடனிருக்கும் எனைதனை
என்னுளிருந்து அல்லது
அதனுள்ளிருந்து வெளிப்பட்ட நான்
நான்!!!
பிரபஞ்சபெருவெளிகளில் அலையும்
ஒரு துகள் நான்...
தேடலின் உணர்வு பெற்று
தெளிய வந்திருக்கும் நான்
நான்!!!
இடையறாது
சுணங்காது
இந்த பிணைப்புச் சுழலில்
சுழன்று
அகன்று பின்னரும் சுழன்று
அகன்று
ஒரு நாள் அந்த
பெருவெளியில் கலக்கவிருக்கும் நான்
நான்!!!
எத்துனை பிணைப்பு??!!
எத்துனை பிடிப்பு??!!
என்னை பிடித்திருக்கும் ஒவ்வொரு
குணமும்
நான் விலக்கியிருக்கும்
ஒவ்வொரு குணமும் நான்!!!
நான் நேசிக்கும்
ஒவ்வொரு உயிரும்
வெறுக்கும்
ஒவ்வொரு உயிரும் நான்!!!
என் இருப்பு அதனை
ஊடுருவட்டும்,
உட்புகட்டும்
ஒரு நாள்
அதனின்று மீளட்டும்... சௌந்தர்
நீக்கமற நிறைந்த
நோக்கம் நான்!!!
ஒரு பறவை
தன் பேடுடன் கூடிடும் பொழுதில்,
கதிரவன் கதிர்கள்
மலையினை தழுவிடும் பொழுதில்,
இனிய இசையில்
இசைந்திடும் பொழுதில்,
என்னுள் பரவியிருக்கும்
காதலின் பிரவாகதினை
பருகத்தலைப்படாமல்
எங்கோ எதிலோ அதனை
தேடிடும் நொடிகளில்,
இறையின் கரங்களில்
கரைந்திடும் பொழுதில்...
என் நான்
கரைந்து...
கவிழ்ந்து...
நானாகிறேன்!!!
என் உள்ளிருக்கும் துணைதனை
உடனிருக்கும் எனைதனை
என்னுளிருந்து அல்லது
அதனுள்ளிருந்து வெளிப்பட்ட நான்
நான்!!!
பிரபஞ்சபெருவெளிகளில் அலையும்
ஒரு துகள் நான்...
தேடலின் உணர்வு பெற்று
தெளிய வந்திருக்கும் நான்
நான்!!!
இடையறாது
சுணங்காது
இந்த பிணைப்புச் சுழலில்
சுழன்று
அகன்று பின்னரும் சுழன்று
அகன்று
ஒரு நாள் அந்த
பெருவெளியில் கலக்கவிருக்கும் நான்
நான்!!!
எத்துனை பிணைப்பு??!!
எத்துனை பிடிப்பு??!!
என்னை பிடித்திருக்கும் ஒவ்வொரு
குணமும்
நான் விலக்கியிருக்கும்
ஒவ்வொரு குணமும் நான்!!!
நான் நேசிக்கும்
ஒவ்வொரு உயிரும்
வெறுக்கும்
ஒவ்வொரு உயிரும் நான்!!!
என் இருப்பு அதனை
ஊடுருவட்டும்,
உட்புகட்டும்
ஒரு நாள்
அதனின்று மீளட்டும்... சௌந்தர்
No comments:
Post a Comment