இறை வெண்பா!!!
என்னுயிராய் நின்றபொரு ளே
கனலாய்யென் னுள்ளே கனன்ற பெருவொளியே
தண்ணளியே தத்து வமே
ஒப்பாரும் மிக்காரும் எக்காலும் போற்றிடுமொப்
பற்றப்ப ரமேந லமே - சௌந்தர்
பொருள்:
1. என் உணர்வினில் உட்கலந்த ஞானமாய், என்னுள் இருக்கும் பொருள். ஞானம் என்பது இறைவன், அந்த ஞானம் நம்முள்ளே இருக்கிறது. அந்த ஞான வடிவினன் இறைவன். போதம் என்றால் ஞான மயக்க நிலை.
2. இந்த உயிர் உடலில் தங்க, வெப்பம் வேண்டும். இறைவன் ஞான வெப்பமாக, பேரொளியாக நம்முள் கனன்று கொண்டிருப்பவன். தண்ணளி - கருணை. கருணை மிக்கவன். தத்துவ வடிவானவன்.
3. தாழ்ந்தவர் இருந்து உயர்ந்தவர் வரை என்றும் போற்றும் இயல்புடையவன். ஒப்பற்ற பரம்பொருள். நம் வாழ்வின் நலமானவன்.
No comments:
Post a Comment