என்னுள்  ஒன்று 
என்னைப் பார்த்துகொண்டிருகிறது...
நிசப்தத்தின் நிழல்களில் 
அது இளைப்பாருகின்றது!!!
எங்கோ 
என்னுள் தூங்கும் என் ஆன்மாவினை 
வருடுகின்றது!!!
இந்தக் கருணை,
வாஞ்சை,
அன்பு,
காதல்...
எல்லாம் எல்லாம் 
யாரையும் பற்றிடாது,
என்னுள் பாய்கிறது!!!
கண்ணீர் கண்ணீர்...
கருணையின் கண்ணீர்...
எதன்பொருட்டுமில்லா கண்ணீர்!!!
இந்த உலகம் என்னுடையதாகவும்...
என்னுடையது மட்டும் என 
ஒரு குழந்தை சொல்வதாய் உணர்கிறேன்!!!
இது என்னுடையதல்ல...
எதுவும் என்னுடையதல்ல...
என் கைகள் பற்றிடத்துடிக்கும் 
கரங்கள்...
அதன் கணங்கள்
எதுவும்...
எதுவும் என்னுடையதல்ல 
என்றும் ஏங்குகிறது!!!
இசையின் நிசப்தங்கள்...
நிசப்தத்தின் இசைகள்...
அமைதியின் ஆரவாரம்...
ஆரவாரத்தின் அமைதி...
என் முன்னின்று 
முரண்படுகிறது!!!
எது நான்???
எது எனது???
ஏன் இது???
ஏன் இது இல்லை???
எல்லாம் எல்லாம்...
என்னுள் பொங்கிப்பிரவாகிக்கின்றது!!!
ஆனந்தம்,
அதனினூடு அழுகை,
துயரம் 
அதனினூடு அன்பு என் 
முரண்கள் சந்திக்கின்றன என்னுள்!!!
இது தேடலின் பகுதி..
என்னுடைய இன்னுமொரு விகுதி...
என்றோ ஓர்நாள் 
விடை வந்து சேரும்!!! - சௌந்தர் 
 
No comments:
Post a Comment