Saturday, March 8, 2014

பரிணாமத்தின் வித்தே.... (உலக மகளிர் தின சிறப்பு கவிதை)



ஒரு துளியினில் 
உயிராய்!!!
உயிரினில் உணர்வாய்- என்னை 
நிலையாய்,
நிறையாய்,
இருப்பாய்,
என் இருப்பின் சாட்சியாய்....
நீ நிறுத்தினாய்!!!

நீ ஒரு உலகம்....
உயிர்களை படைக்கும் 
இரண்டாம் உலகம்!!!

இறைக்கு சிறப்பில்லை...
இறையே சிறப்பு!!!
உனக்கும் சிறப்பில்லை...
நீயே இங்கு சிறப்பதினால்!!!


என்னுள் எழும் 
எழுத்துக்கள் 
பெண்ணால் ஆனவை!!!
உன்னால் ஆனவை!!!

வாழ்வின் 
துவந்தத் துவக்கத்தில்....
வாழ்வளித்தவள் நீ!!!

துவைதம் 
இல்லா 
காலங்களிலும்...
உயிர்கள் 
அத்வைதத்தின் 
ஆரம்பத்திலும்...
இருந்தது நீயே!!!
இங்கே இயக்கியது நீயே!!!
கொடுத்தது நீயே!!!

தாயே...
உன்னை 
பெண்ணென்று 
நான் அழைக்கிறேன்...
நீ பரிணாமத்தின் சாட்சி!!!

இந்த பசுமைக் கோளத்தில் 
பசுமையை,
உயிர்மையை, 
உசுப்பிவிட்டவள் நீ!!!

இன்று உன்னைப் போற்றுவது 
நீ பெண்ணென்பதால் 
மட்டுமல்ல....
நீ பெண்ணென்று மட்டும்  
உன்னை நான் போற்றினால்
பரிணாமத்தின் பகுதியை 
நான் விட்டுவிட்டவனாவேன்!!!!!!

நீ இங்கு பெண்ணாய்
இருப்பது ஒரு அடையாளம்....
எங்கள் 
வாழ்வின் பயணத்தின் அடையாளம்!!!
எங்கள் உயிரின் ஓட்டத்தின் அடையாளம்!!!

எங்கள் பரிணாமத்தின் சிசுவே..
உயிர்களின் உள்ளுறையே...
மனிதனின் .மறையே....
உன்னை வணங்குகிறேன்!!!      - சௌந்தர் 

No comments:

Post a Comment