Thursday, March 6, 2014

தாயின் உணவும் குழந்தையின் பிறப்பும் (தாயும் சேயும்)


குழந்தை பிறப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. எத்துனையோ மருத்துவ தொழில்நுட்பங்கள் இருப்பினும், ஒரு கரு உருவாகி அது  இந்த மண்ணில் வந்து சேரும் வரை ஒரு பெண் பல விஷயங்களை துறக்க வேண்டியுள்ளது. அதனால்  தாய்மை என்பது மிகப்பெரும் பேராக கருதப்படுகிறது. உண்ணும் உணவிற்கும் குழந்தை பிறப்புக்கும் தொடர்பு உண்டா என்பது பலருடைய கேள்வி. முன்னாளில் கரு உண்டானதில் இருந்து, குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகும் வரை தாய் பத்தியம் இருப்பதும் குறிப்பிட்ட வகையான உணவுகளை தவிர்க்க வேண்டுவது நம் நாட்டில் இருந்துவருகின்றது. அண்மையில் லண்டன் கிங் கல்லுரியை சேர்ந்த பேராசிரியர் லூசில பாஸ்டன் மற்றும் அவருடன் உள்ள ஆய்வாளர்கள் தங்களது ஆராய்ச்சியில் குறைப்ரசவதிற்கும் தாய்மார்கள் உண்ணும் உணவிற்கும் மிகப்பெரும் தொடர்பு உள்ளதென்பதை வெளியிட்டுள்ளனர். ஒரு கரு உருவாகி 37 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்து விட்டால் அதுவே குறை பிரசவம் என்பதாகும்.  தாயின் உணவிற்கும் குழந்தையின் பிறப்பிற்கும் உள்ள தொடர்பு பல காலமாக நம்பப்பட்டு வந்தாலும், இந்த ஆராய்ச்சியில் அது தெளிவாகிறது. இந்த ஆராய்ச்சியில் நார்வே நாட்டில்  (2002- 2008 வரை) உள்ள சுமார் 66,000 கர்பிணிப் பெண்களிடம் அவர்களின் உணவுப் பழக்கம் பற்றியும் குழந்தை பிறப்பு பற்றியும் தகவல் திரட்டப்பட்டது. இந்த ஆய்வில் அவர்களின் உணவுப் பழக்கம் முன்று வகையில் தொகுக்கப்பட்டது. இதில் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் பொருட்கள், தண்ணீர், முழு தனிய வகைகள், நார்சத்து நிறைத்த உணவு மற்றும் ரொட்டிகள் சாப்பிட்டு வந்த பெண்களில் குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவாகவும், மேலும் கிழங்கு வகைகள், மீன், சமைத்த காய்கறிகள், கொழுப்பு குறைந்த பால் வகைகள் எடுத்து கொண்டவர்களுக்கும் இந்த அபாயம் மிகக்குறைந்த அளவிலேயே இருந்ததாம். அதிகமாக உப்பு, இனிப்பு சேர்த்த உணவுகள், அதிகமாக என்னை சேர்த்த நொறுக்கு தீனி வகைகள், ஐஸ்க்ரீம் மற்றும் அதிகமாக மாமிசம் சேர்த்து கொண்டவர்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படும் நிலை மிகவும் அதிகமாக இருந்ததாம். இதனால் துரித உணவு வகைகள் மற்றும் நொறுக்கு தீனி வகைகள் கர்பிணிப்பெண்களுக்கு ஏற்றதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  எனவே கர்பகாலத்தில் சத்து நிரந்த நல்ல உணவு வகைகளையே பெண்களுக்கு கொடுப்போம். 

No comments:

Post a Comment