Friday, March 7, 2014

கவிதைச் சிதறல்கள்!!!


காற்று 
சுவாசத்தை சுமப்பது போல்...
நான் 
உன் வாசத்தை சுமக்கிறேன்!!!

உனக்கு 
உவமை தேடும்போது - நான் 
ஊமையாகிவிடுகிறேன்....
நீ 
உவமையில்லா உவமை!!!

சாலைகள் 
சப்தமிட்டுச் செல்லும் 
வாகனங்களுக்காக மட்டும் 
சமைக்கப்பட்டதல்ல....
சப்தமிடாமல் செல்லும் 
ஒரு கவிதைக்காகவும் தான்!!!

உன்னால் 
என்னுள் 
படிந்து சென்றதை 
பத்திரமாக 
பதிவு செய்கிறேன் நான்!!! - சௌந்தர்

No comments:

Post a Comment