Saturday, March 8, 2014

வாழ்வின் பரிணாமம் (தத்துவக் கவிதை)


வாழ்க்கை 
ஒரு துவைதத் துவக்கம்....

அது அத்வைதத்தின் 
அடக்கம்...

இரு துருவங்களின் 
துவந்த யுத்தம்....

இந்த யுத்தத்தின் 
முடிவில் முளைத்த 
ஒரு அத்வைதம்....

ஒன்றிலிருந்து ஒன்றாய் அரும்பிய 
இருவேறு பரிணாமங்களின் 
பரிமாற்றங்கள்...

இந்த பரிணாமம் 
பரிமாற்றதிற்கே..
பறிமாற்றம் 
பரிணாமத்திற்கே!!!

இதுவும் 
அத்வைதத்திலிருந்து 
துவைதமானது தான்!!!
மீண்டும் என்றோ ஒரு நாள்...
இரண்டாய் 
இருவேறு இயல்பாய்...
முரணாய்...
முடிவில்லா துருவமாகிவிட்ட 
இந்த துவைதத்துளி 
ஒன்றாகும்...
அடங்கிய அத்வைதம் 
ஆரம்பமாகும்....

முடங்கிய முடிவு துவங்கும்...
துவங்கிய முடிவு 
அடங்கும்.... - சௌந்தர்

No comments:

Post a Comment