காரிருள்தனை கவிழ்த்துவிடும் வேலை...
இரைதேடப் பரவிய புள்ளினங்கள் - தன்
இனத்துடன் இணங்கிடும் வேலை...
மதங்கொண்ட ஒற்றைக்களிறு பசிபெருகி
கருப்புக்கொள்ளையதனில் புகுந்தநொடி...
ஒற்றை நிலவின் வெளிச்சமும்
வெளிகளின் வேலிகள்கூட நம்மை
துளைக்கவொண்ணா இணைக்கமது!!!
என்னடர்ந்த தோள்மீதுனது கற்றைக்குழல்
படர்ந்திருந்தது இரவின் இனிமையினை
இன்னுமொருமுறை சொல்லியது!!!
ஆளுமைக்காகவே படைக்கப்பட்டது ஆண்மை
எனும் ஆதிக்கஆகமங்கள் அழிந்து...
அன்பினை ஆளுவதே ஆண்மையெனும்
ஒரு புதியஆத்திச்சூடி புரிந்தது!!!
இன்று என் தனிமைகளில்கூட
என்தோள் தழுவிய உன்கைகளும்
கற்றைக்குழலும் கண்ணீர்துளிகளும்
படருவதாய்ப் படுகிறதடி!!! - சௌந்தர்
No comments:
Post a Comment