Friday, April 13, 2012

என்றோ
எனக்காக பிறந்துவிட்டவள்!!
என் சொற்களையும் இதழ்களையும் 
இனிக்கவைத்தவள்!!
கன்னிக்காரிகையாய் இருப்பினும்- என் 
எண்ணத்தூரிகைக்கு வண்ணம்தந்தவள்!!!
என்னைத் தன் மடிமீது கிடத்தி வாசனை தந்தவள்!!
முதுமையின் பெருமை பெற்றிருப்பினும்...
புதுமையின் பொழிவினைப் போற்றுபவள்!!
அவள் தான் நான் ஸ்பரிசித்த முதல் பெண்!!
என்னை ஸ்பரிசித்த முதல் காதலி!!!
என் எண்ணக்கலவைகளுக்கு பெரும் சின்னமாய்!!
என் சிந்தனைக்கூடத்தில் 
கருத்துக்கலவியில்- இங்கு
கவிதைகளாய் அவள்...
தமிழ்!!!  - சௌந்தர் 

No comments:

Post a Comment